நவீசத்தியமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நவீசத்தியமூர்த்தி
இடம்:  சிங்கப்பூர்
பிறந்த தேதி :  20-Jun-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Apr-2018
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழகம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள ஜாம்புவானோடை கிராமம் . உள்ளூர் கல்லடிக்கொல்லை ஊராட்சிப் பள்ளியில் தொடக்கக்கல்வி முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வரை. புகுமுக வகுப்பும் இளங்கலை வரலாற்றில் பட்டக்கல்வியும் அதிராம்பட்டினம் காதர்மொகிதீன் கல்லூரி . 1994 இல் சிங்கப்பூர் பணிசெய்ய வந்து எல்லாம் நல்லவிதமாக அமைய 2000 ஆம் ஆண்டு நிரந்தரவாசமும் 2007 இல் சிங்கப்பூர் குடியுரிமையும் பெற்று வாழ்கிறேன். கட்டுமான நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் பணி. கவிதைகள் வாசிப்பதிலும் புனைவதிலும் ஈடுபாடு. சிங்கபூரில் கவிமாலை அமைப்பின் செயலாளர் பொறுப்பு. இதுவரை படைத்துள்ள நூல்கள் நான்கு. ௧.தூரத்து மின்னல் ௨. சிந்தை கவர்ந்த சிவனடியார்கள் ௩. ஏணிப்படிகள் ௪. பார்வை"கள்"

என் படைப்புகள்
நவீசத்தியமூர்த்தி செய்திகள்

மனைவி 



கற்றைக் குழல்முடித்து 
சற்றே தலைசாய்த்து 
ஒற்றைப் பார்வையில் 
உதறல் தரச் செய்யும் 
ஒன் உமன் ஆர்மி  ! 
ஒசாமா பின் லேடி ! 

மேலும்

கண்ணாடி 

சிங்கம் முயல் கதையில் 
திரவநிலை 
கொலைகாரன் !

முன்னாடி உள்ளதை மட்டுமின்றி 
பின்னாடி உள்ளதையும் 
நம் முன்னாடி காட்டும் 
முன்னோடி  சோதிடன் !

வட்டம் , முட்டை 
சதுரம் , செவ்வகம் 
அறுகோணம் ,என்கோணம்
என 
எவ்வடிவில் இருந்தாலும் 
சட்டத்துக்குட்பட்ட 
குடிமகன் ! 

கண் 
காது 
மூக்கு என 
 முப்புலன்களையும் இணைத்தாலும் 
இருபுல பெயர் தாங்கி
( மூக்குக் கண்ணாடி ) ! 


மேலும்

கண்கள் 

பேசிடவும் 
ஏசிடவும் 
கண்டிக்கவும் 
தண்டிக்கவும் 
உனக்கு மட்டும் தானடி 
கண்களையும் சேர்த்து 
முகத்தில் 
மூன்று கண்கள் !


மேலும்

நவீசத்தியமூர்த்தி - செல்வ பாண்டி ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2017 9:32 pm

ஒரு வாத்து இருந்தது , அந்த வாத்து தினமும் அழகாக ஆடை அணிந்து கொண்டு பள்ளி சென்று வரும் , ஒரு நாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றது மாலை பள்ளி விட்டு வந்தது , வரும் வழியில் ஒரு சலூன் கட்டையை பார்த்தது , கடைக்குள் சென்றது , சலூன்கடைக்காரரிடம் கேலியாக ஒரு கிலோ திராச்சை கேட்டடது ,சலூன் கடை காரர் ஆத்திரம் அடைந்தார் ,

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே