கருமணியிற் பாவாய்நீ போதாயாம் - காதற்சிறப்புரைத்தல்

குறள் - 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

Translation :


For her with beauteous brow, the maid I love, there place is none;
To give her image room, O pupil of mine eye, begone!


Explanation :


O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

எழுத்து வாக்கியம் :

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

நடை வாக்கியம் :

என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

பொருட்பால்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

காமத்துப்பால்
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
மேலே