பாலொடு தேன்கலந் தற்றே - காதற்சிறப்புரைத்தல்
குறள் - 1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
வாலெயிறு ஊறிய நீர்.
Translation :
The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow.
Explanation :
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.
எழுத்து வாக்கியம் :
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
நடை வாக்கியம் :
என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.