தெருவெல்லாம் தீபம் திருக்கார்த்திகை நாள்

கருங்கூந்தல் தன்னில் கவின்மலர்கள் சூடி
அருங்காஞ்சிப் பட்டுடுத்தி அந்திநிலாப் போல
மருவிலாமங் கையர் மணிதீபம் ஏற்ற
தெருவெல்லாம் தீபம் திருக்கார்த்தி கைநாள்
வருகைதந்தாய் வான்நிலா வண்ணதீபம் காண
அருணா சலம்பார் அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-25, 11:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே