மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை - கொடுங்கோன்மை
குறள் - 556
மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
மன்னாவாம் மன்னர்க் கொளி.
Translation :
To rulers' rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers' light.
Explanation :
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.
எழுத்து வாக்கியம் :
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.
நடை வாக்கியம் :
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.