மனைவியாக வந்தவளே உனக்காய் உன் கணவன் எழுதிய கவிதை....................
மனைவியாக வந்தவளே
உனக்காய் உன் கணவன்
எழுதிய கவிதை.................
நாம்
பிரிந்திருக்கும் இந்நாட்கள்
குறுகிவிட ஆசை
உன் விழி பேசும் - காதலை
நான் உணர்ந்திட ஆசை
உன் நெற்றியின்
மத்தியில் இருக்கும் -குங்கமம்
என் நெற்றியில்
பதியிட - ஆசை!
உன் விரல் நுனிபடும்
உணவை நான் ருசித்து
உன்ன - ஆசை!
உன் கால் சுட்டு
விரல் பிடித்து- மீண்டும்
உனக்கு மெட்டியிட
ஆசை!
சின்னதாய் உன்னிடம்
சிறு குறும்பு செய்ய - ஆசை!
சண்டை பலயிட்டு
உனை சமாதானம் செய்ய ஆசை!
சமாதானத்திற்கு பின்
உன் தோள் மீது
சாயந்துகொள்ள ஆசை!
நான் செய்யும் பெரும்
தவறை - நீ
மன்னித்து,மறந்து விட -ஆசை!
என் கோபத்தை
நீ- புரிந்து கொண்டு
கோபத்தை போக்க
நீயிடம் சிறு முத்தத்திற்கு
ஆசையோ ஆசை!
உன் மடியில்
நானும் - ஒரு
சிறு குழந்தை போல்
தவழ்ந்திட ஆசை!
கர்பகாலத்தில்
ஒரு - தாயாக
நான் இருந்து - உனக்கு
பணிவிடை செய்ய ஆசை!
உனை போன்ற
ஒரு பெண்ணை
நாம் பெற்றிட -ஆசை!
என் கடைசி
மூச்சினிலும்
"பாப்பா" என்ற
உன் செல்ல பெயரை
அழைத்திட ஆசை!
இறக்கும்போதும்
மட்டும் நான் முதலில்
இறக்க ஆசை!
என் வாழ்க்கை
துணைவியாக
வந்தவளே - என்
வாழ்வை உனக்காய்
அர்பணிக்க அளவில்லா
ஆசையோ ஆசையடி!