தனிமையில்.... வார்த்தைகள் செவியில் கேட்கவில்லை ஆனால் மனமும் மதியும்...
தனிமையில்....
வார்த்தைகள் செவியில் கேட்கவில்லை ஆனால் மனமும் மதியும் வார்த்தைகளால் மூழ்கி கிடக்கின்றன..
அதன் பெயரே தனிமை...
செவியில் கேட்ட அறிவுரை விளங்கவில்லை ஆனால் தோன்றும் வார்த்தைகள் யாவும் ஏதோ ஒரு பொருளை தேடி செல்கின்றன...
அதன் பெயரே தனிமை...
தனிமை என்பது நம்மை இருவராய் பிரிக்கும்..ஒருவன் தனிமையில் ஞானியாகிறான்.. மற்றொருவன் தனிமையில் தள்ளாடி தன்னிலை மறந்து போகிறான்..
இவை யாவும் அவன் எண்ணத்திலேயே உள்ளது.
தனிமை என்பது இருள் போன்றது என்பார்கள்..எல்லாரும் அதில் தவிதவித்து போவர்..ஆனால் எவர் ஒருவர் மனதை ஒருநிலை படுத்தி சரியான பாதையில் செல்வாரோ அவரே ஒளிக்கான வழியை கண்டுபிடித்து வாழ்வை ஒளிபெற செய்வார்.
வீரத்தின் வெளிப்பாடு மற்றவருடன் போட்டியிடுவது மட்டுமின்றி அவனின் வீரம் தன் பலம் ,பலவீனம் அறிந்து தனிமையில் போட்டியிட்டு வெற்றி காண்பதிலே முழுமை அடைகிறது.
இதனால் தனிமையை தேடி செல்ல வேண்டும் என்று கூறவில்லை வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தனிமைக்கு தள்ளப்படும் வேளையில் அதனை வெற்றிக்கொள்வதே அறிவுடைமை என்று கூறப்படுகிறது.
தனிமையில் ஒருவன் தன்னுடைய அகந்தை, அழுக்காரு, தலைக்கணம், ஆடம்பரம், சுயநலம் யாவற்றையும் விலக்கி ஒரு முழு மனிதனாக மாறுவதே அதன் சிறப்பாகும்.
எனவே, தனிமை கண்டு அஞ்சாமல் ,அது கடவுள் நம் முன்னேற்றத்திற்கு வைக்கும் முதற்புள்ளி என்று எண்ணுதல் வேண்டும்..