எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்றைய பதிவின் தொடர்ச்சி.... டாக்டர் போர்பஸ்ராஸ் (Dr.Forbesross) தனது...

நேற்றைய பதிவின் தொடர்ச்சி....

டாக்டர் போர்பஸ்ராஸ் (Dr.Forbesross) தனது CANCER - ITS CAUSE AND CURE நூலில் கரும்புச் சாறு மற்றம் கரும்புச் சர்க்கரையின் மகத்துவத்தைச் சொல்வதைக் கேளுங்கள்:

1. மேற்கிந்தியத் தீவுகளில் கரும்புத் தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் கறும்புச் சாறு இடம் பிடித்துள்ளது. மேலும் கறுப்பு நிறக் கரும்புச் சர்க்கரையை அவர்கள் தினம்தோறும் உட்கொள்கிறார்கள். இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கிறார்.

2. கரும்புச் சாற்றில் உள்ள கனிமச் சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது. அதுவுமில்லாமல் கரும்புச் சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது. அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்.

3. அதுவுமில்லாமல் உடலில் நோயை உண்டு பண்ணும் அமிலத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை வழங்கிறதாம்.

டாக்டர் லூயிஸ்குன், டாக்டர் சிரில்ஸ்காட், டாக்டர் லஸ்ட் என்று நிறைய பேர் இதன் அருமையைச் செல்லியிருக்கிறார்கள்.

நாடு கடத்தப்பட்ட நல்லவற்றை (கரும்புச் சர்க்கரையை) நாம் முதலில் நம் பழக்கத்திற்கு கொண்டு வருவோம்.

பதிவு : பசப்பி
நாள் : 8-Jul-14, 9:37 am

மேலே