சான்றவர் சான்றாண்மை குன்றின் - சான்றாண்மை

குறள் - 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

Translation :


The mighty earth its burthen to sustain must cease,
If perfect virtue of the perfect men decrease.


Explanation :


If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.

எழுத்து வாக்கியம் :

சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.

நடை வாக்கியம் :

சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

பொருட்பால்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

காமத்துப்பால்
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
மேலே