சின்ன வீட்டு ராணி

சின்ன வீட்டு ராணி எங்க ராணி

ஆண்: சிங்காரத் தங்கநிறம் அவள் மேனி
கொள்ளைக்காரன் போலே
எல்லை தாண்டிவந்த
கொடியவரை அழிக்கும் கோபராணி

பெண்: எங்கள்-
அடிமைதனை அகற்றும் அன்புராணி

ஆண்: மெய்யாரப் பொய்கூறும்
வீணர்களின் மத்தியிலே
நையாத கொய்யாக்கனி

பெண்: எங்க ராணி - ஒய்யாரக்
கண்ணின் மணி

ஆண்: மங்கையரின் பக்கத்திலே
மயல்போலே - கெட்ட
வம்புக்கார கும்பலுக்குப்
புயல்போலே

பெண்: செங்கமலச் செவ்விதழை
முகத்தாலே - வென்று
மங்காத அன்புதனை
வளர்ப்பாளே

ஆண்: வாளெடுத்து வீசுவா

பெண்: மானங் காக்க

ஆண்: ஏழை மக்கள் பக்கம் பேசுவா

பெண்: துன்பம் தீர்க்க

ஆண்: தேவைக்கு மேல் சேர்த்து வச்சா
தேடி எடுப்பா
தின்ன உணவில்லாதவர்
கையில் கொடுப்பா

பெண்: செல்வியவள் கண்ணாலே
பொல்லார் தனைக் கண்டால்
சீறிவரும் வேங்கையாம் வீராங்கனை
மானங்கெட்டு ரோஷம் விட்டு
வலிய வந்து குந்திக்கிட்டு
மாருதட்டும் சூரப்புலி மண்டை உருள.........

ஆண்: அங்கு - மற்றுமுள்ள ஒற்றர்களும் கண்டு மருள
வான்முட்டவே முழக்கம் மாபெரிய கூட்டத்திலே
மங்கையவள் செங்குருதி நீராடினாள் - வீரப்
பெண்கள் புகழ் ஓங்கிடவே போராடினாள்.


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:55 pm)
பார்வை : 119


மேலே