தமிழ் கவிஞர்கள்
>>
ஈரோடு தமிழன்பன்
>>
என்று இருந்தான்
என்று இருந்தான்
பள்ளியில் பையனைச்
சேர்த்து விட்டால்
கவலை தீரும் என்றிருந்தான்;
பள்ளியில்
சேர்த்த கவலை
படிப்பு முடிந்தால் தீரும்
என்றிருந்தான்;
மூன்றாம் வகுப்பில்
பையன் தேறிய கவலை
வேலை ஒன்று கிடைத்தால் தீரும்
என்றிருந்தான்;
வேலையில்
உயர்வு கிடைக்காதா என்று
கிடைத்த வேலையில்
கவலை தீராதிருந்தான்.
கிடைத்த வேலை உயர்வு
நிரந்தரமாகாதா
என்ற கவலை நீங்கும் முன்
வரதட்சணை
வாரிக் கொடுத்துப்
பெண்ணொருத்தியைக்
கட்டிக் கொடுக்க
வராதா இடம் என்று
கவலைப் பட்டான்;
பையனைவிட இப்படிக்
கவலையை வளர்த்து வளர்த்தே
அவன் காலமானான்.
கவலைப் படாமலே
பையன்
அடக்கம் செய்தான்
அப்பனை.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
