தோத்திரப் பாடல்கள் சக்திக் கூத்து

தகத் தகத் தகத் தகதகவென் றாடோமோ? -- சிவ
சக்தி சக்தி சக்தி யென்று பாடோமோ?
(தக)

சரணங்கள்


அகத்தகத் தகத்தினிலே உள் நின்றாள் -- அவள்
அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரணமென்று வாழ்ந்திடுவோம் நாமென்றே
(தக) 1

புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே -- அது
குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே.
(தக) 2

இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனையிங்கே கொண்டெய்தி
மந்திரம் போல வேண்டுமடா சொல்லின்பம் -- நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்
(தக)
3

[பாட பேதம்]: ‘வயிறப்படை காணுங்கால்.’

-- கவிமணி
[முதற் பதிப்பு]: ‘தாயடிக்கீழ் செய்போலே.’


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:18 am)
பார்வை : 0


மேலே