தமிழ் கவிஞர்கள்
>>
பாரதிதாசன்
>>
அவளின் சொல்
அவளின் சொல்
கொஞ்சுப்பரி மாறுமொழி
பண்டைத்தமிழோ, அலது
கொம்பிற்கனி யோ எளிதில்
உண்டற் கமுதோ, அரசி
மிஞ்சிச்சுவை தோய்உதடு
பஞ்சைக்கொரு வாழ்வினிய
கொண்டற்கிணை யானகுழல்
இன்பச்சுனை யாடுவது
கூடுமெனிலோ பெரியபேறு பெறுவேன் அலது
நீடுதுயரே அடைவேன் ஈடுசொலவோ அரிது,
தேடுபொருள் யாதுமிலை, சீருமிவளே, உறவு
யாவுமிவளே, இனிய தேனிவளில் ஈ எனவும்
அமிழ்வேனோ
பஞ்சுக்கிணை யான அடி
அன்புக்குரி தானதுணை
மின்பட்டது போல்மெருகு
பொன்பட்டது போல் ஒளிசெய்
அன்புற்றிடு மாது நகை
இன்புற்றிடு மாறுளது
பண்புக்கினிதாய் ஒழுகும்
நண்புக்கினி யான் எழுது
பாடலவள் நான்ந(ல்)லுரை ஆடலவள் நானடையும்
ஓடைமல ரே அரசி ஊறுமணம் நானுமதில்
நீடவரும் யாழுமவள், நீர்மை இசை நான்அதனில்
ஈடுபடு மேனியவள் ஏழைஅதில் ஆவிஎன
அமைவாளோ
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)