நேற்று யாரும் வரவில்லை

இரண்டொரு நாட்கள் குளிப்பதற்கில்லை
வைத்தியர் சொற்படி ஒருநாள்
கவனம் கருதி மற்றும் ஒருநாள்

உடல் நலம் கேட்டு யாரும் வருவார்
திரும்பும் போது
தயவு செய்தெனக்காகச்
சந்து விடாமல் கதவை மூடெனக்
கேட்கணும்

பொருந்தி மூடாக் கதவின் சந்தில்
குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத்
தெரிந்திடும் நீலவானை
எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:11 pm)
பார்வை : 0


மேலே