தேரோட்டம்

காடெ கோழி வெச்சுக்
கணக்காக் கள்ளும் வெச்சு
சூடம் கொளுத்தி வெச்சு

சூரன் சாமி கிட்ட
வரங்கேட்ட வாரீங்களா

ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி

கற்கண்டு வாழெ வெச்சு
விருட்சீப் பூவ வெச்சுப்
பொங்கல் மணக்க வெச்சு

வடக்கன் சாமி கிட்ட
வரங்கேட்ட வாரீங்களா

ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி

இளநீ சீவி வெச்சு
இரும்பாக் கரும்ப வெச்சுக்
குளிராப் பால வெச்சுக்

குமரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா

தெரு ஓடும் தூரமின்னும்
வடமோடிப் போகலியே
வடம்போன தூரமின்னும்
தேரோடிப் போகலியே

காலோயும் அந்தியிலே
கண் தோற்றம் மாறையிலே
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி

தெரு ஓடும் தூரமின்னும்
வடமோடிப் போகலியே
வடம்போன தூரமின்னும்
தேரோடிப் போகலியே

காலோயும் அந்தியிலே
கண் தோற்றம் மாறையிலே
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:25 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே