தமிழ் கவிஞர்கள்
>>
ஞானக்கூத்தன்
>>
ஈ
ஈ
கண்ணைக் கவரும் மார்பகங்கள்
பார்ப்பதரிதாய்ப் போய்விட்டதென்று
சுற்றிலும் பார்த்தேன்
உயர்ந்த வெள்ளைத் துணிக்குள்
இரண்டில் வலது பொதிந்திருந்தது
அதன் மேல் ஆனால் ஒரு ஈ
சாமரம் போல மார்பசைந்தது
அசையாதிருந்தது நான்
இடத்தை விட்டுப் போக நேர்ந்தது
போய் விட்டிருக்குமா ஈ
நிச்சயம் போய்விட்டிருக்கும்: இல்லை
நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்
ஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் கூடப்
பார்க்கப் படாத ஈ யூகத்தளவு தான்
கண்ணால் எடுத்துச் செல்லப்பட்ட
கண்ணைக் கவர்ந்த மார்பகத்தின் மேல்
என்றும் இருக்கிறது ஈ.
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)