நிலவில் வானவில் ..

நீ சிரித்துக் கொண்டிருக்கிறாயா?

என் வீட்டுச் செடிகள் பூத்துக் கொண்டிருக்கிறது !

நீ அண்ணாந்து பார்த்திருப்பாய் ஆகாயத்தில் வானவில் !

உன் பெயரை எழுதுகிறேன்… நான் எவ்வளவு பெரிய கவிஞன் !

பறிக்கத் துடிக்கிறது கைகள் உன் புடவையெங்கும் பூக்கள் !

என் இருதயத்தில் ரத்தக் கசிவு என்று மருத்துவத் தகவல் என்றாவது நீ அழுதிருப்பாயோ !

இரவு வருகிறதோ இல்லையோ கனவு வருகிறது ! கனவு வருகிறதோ இல்லையோ இமைகளை மூடினால் நீ வருகிறாய் !


கவிஞர் : பா.விஜய்(18-Jul-11, 11:54 am)
பார்வை : 1258


மேலே