மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 12:59 pm)
பார்வை : 184


மேலே