கடமை

கடமை புரிவா ரின்புறுவார்,
என்னும் பண்டைக் கதைபேணோம்;
கடமை யறியோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென்போம்;
மடமை, சிறுமை, துன்பம்பொய்
வருத்தம், நோவு, மற்றிவைபோல்
கடமை நினைவுந் தொலைத்திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 1:03 pm)
பார்வை : 180


பிரபல கவிஞர்கள்

மேலே