இயற்கை

எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய்! அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் "ஆடற் கலை" தான்
அமையச் செய்தாய் வாழி!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 2:50 pm)
பார்வை : 115


மேலே