இறைவனின் நாட்டப்படி

இதுவும் இறைவனின் நாட்டப்படி
வேலை இனிதே அமைந்தது உனக்கு

இந்த புகழ் அனைத்தும் அந்த
வல்லோன் ஒருவனுக்கே மட்டுமே

வேலை கிடைத்து விடுமா ? இவன்
முன்னேறி விடுவானா சிலரின் எதிர்பார்ப்பு

ஆதங்கம் , ஆர்பரிப்புகள் ஏத்தனை
பல குடும்பமும் பகையானது இன்று

அத்தாஉல்லா பெருமையாக பேசியவர்கள்
உன்னை இகழ்ந்ததையும் கேட்க முடிந்தது

உன் உம்மும்மா , கன்னப்பாவின் துவா
இது உண்மையானது என்றும் உனக்கு

அவர்கள் வாழ்ந்ததின் ஒரு துளி கூட
நாமில்லை என்ற வெட்கம் ,வேதனை

அவர்கள் பெயரை காப்பாற்ற – உங்கள்
எல்லோருடைய கடமையும் கூட

அவர்கள் வழியில் நீங்கள்-அவர்கள்
மறுமைக்காக துவா செய்யுங்கள்

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (29-Jul-13, 12:31 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 66

மேலே