தடைகளை தகர்த்திடுவோம்.

மலராத பூ மாலையகாது
தேடாத வெற்றி தெரியாது
ஓயாத முயற்சி உண்டென்றால்
உலகின் வெற்றி மறையாது!

நில்லாது போராடு
முள்ளாவது புதராவது....
கண்ணீர் விடாதே
வியர்வை விடு!
பன்னீர் தெளித்து
உயர்வை தோடு...!

முயன்று விடு
முயலாய் அல்ல ....சிறு
புயலாய்
எரித்துவிடு
திறமையை அல்ல-உன்
தீமைகளை!

இருட்டில் இருக்கிறது
இந்தியா என்று
குருட்டு மனிதனிடம்
சொல்லிவிடு...
கருப்பு உலகம்
துடிப்பு உலகமாக
உன் கண்களை
அவனுக்கு கொடுத்துவிடு!

திறமைகள் கதவுகள்
திறக்காவிட்டால்
நம்பிக்கை கொண்டு
உடைதிடுவோம்!
தடைகளை தகர்த்து
எறிந்திடுவோம்...!

வெற்றி பாதையில்
முட்கள் இருக்கும்
வேதனை வாழ்க்கை
முயற்சியை தடுக்கும்!

நெஞ்சை நிமிர்த்தி
நீ நடந்தால்............
சாதனை கொடியை
நாட்டிடலாம்....!
சரித்திர புகழை
போற்றிடலாம் ..........!

எழுதியவர் : anu (3-Sep-13, 6:29 pm)
பார்வை : 79

மேலே