பழனி குமாரின் இசைக் குயில் இசைப் பிரியா கல்பனா பாரதி

இலங்கையின் இசைக் குயில் இசைப் பிரியாவிற்கு
இரக்கமற்றோரின் கரங்களில் ஏற்பட்ட கொடுமையான மரணத்திற்கு உருக்கமான கண்ணீர் அஞ்சலி செய்திருக்கிறார்
கவி நண்பர் பழனி குமார் .
அத்தோடு நமது தமிழுணர்வையும் உசுப்பி
விட்டிருக்கிறார். சோகத்தை சித்தரிக்கும்
கண்ணீர் கவிதை மட்டுமில்லை . மானம் பெரிதென வாழும் தமிழருக்கு இலங்கையில் இன்று நேர்ந்திருக்கும் அவலத்தையும் சுட்டிக் காட்டும் கவிதை
மிக மிகச் சிறப்பான கவிதைக்கு நான் சொன்ன
கருத்துக்கள் இங்கே உங்களுக்காகவும் :
குயிலின் குரல் வளையை அறுத்து குருதி குடித்த ஈனர்களை என்ன சொல்லி அழைப்பது ? கொடுமை கொடுமை ஆற்றவொண்ணா கொடுமை.
இசைப்ரியாவின் கற்பை சூறையாடி
இன்னும் அடங்கிடா வெறியினால்
இழுத்து சென்று இன்னுயிர் பறித்தும்
இரத்தமும் குடித்தனர் சிங்கள மிருகங்கள் !
இன்றைய காட்சி இதயத்தை துளைத்தது
இனப்படுகொலை காட்சிக்கு சாட்சியானது !
இசைப்ரியாவின் இழப்பால் துவங்கியது
இனவெறியன் ராஜபக்க்ஷேவின் இறுதிகாலம் !
கண்ட காட்சியை உணர்வுப் பூர்வமாக தத்ரூபமாக கவிதையில் தந்திருக்கிறீர்கள் . அரசாங்கங்களின் உயர்மட்டத்திலிருந்து தெருவீதிவரை இங்கே ஜால்ராக்களின் சம்மேளனம் .
சத்தியத்தை எடுத்துரைத்து தீர்வு காண்பார் யார் ?
இங்குள்ள தமிழரை பணிவோடு கேட்கிறேன்
இனியும் வேண்டாம் பிரிவினை நமக்குள் !
இலக்கைப் புரிந்து இணைவோம் நாமும்
இலங்கைத் தமிழர் வாழ்ந்திட வழிசெய்வோம் !
---இணைவார்களா ? ஒன்று படுவார்களா ? ஒரே குரலில் குரல் எழுப்புவார்களா ?
பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது .
நெஞ்சில் துணிவும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே !
வாய்ச் சொல்லில் வீரரடி !
---கையால் செயலாற்றுபவர் உளரா ? பார்ப்போம்!
சோகத்தில் பரதத்தின் ஓர் இனம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது சோகத்திற்கு மாநாடு கூடுகிறது வியாபரமாம் வர்த்தகமாம் நல்லுறவாம் ! ஐயோ தேவுடா !
இங்கே சிறப்பாக கவிதை புனைவோர் சிலர் . அதிலும் சமூக ஆர்வத்துடனும் அக்கறையுடனும் கவிதை புனையும் கவிஞர்கள் ஒரு சிலரே ! ஓங்கி ஒலி எழுப்பும் இந்தச் சங்க நாதத்தைப் போற்றுகிறேன். பாராட்டுகிறேன் .
நான் போற்றும் சங்க நாதம் இரண்டு
ஒன்று கண்ணனின் பாஞ்சசன்யம்
மற்றது பாரதிதாசன் கவிதையில் முழக்கிய சங்க நாதம்!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
--------------------------ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!
அன்றே எழுதியிருக்கிறார் பாவேந்தர் தீர்க்க தரிசனத்துடன் ;
கவனிக்க வேண்டிய வரிகள் :
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!
( சூர சம்காரம் -- சூர சங்காரம் என்பது போல் )
அருமையான கவிதைக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள். பழனி குமார் !
~~~கல்பனா பாரதி~~~