காடு விளையுது நாட்டினிலே

கொடிமரங்கள் காடாகும்
குரங்குகளாய் கட்சி மாறும்
சிங்கமென்று சிறுநரிகள்
சீரழிக்க நாடு போதும்

வருகின்ற தேர்தல் செடி
வளர்க்க நினைக்கும் மக்களுக்கு
வளி விற்கும் மரங்களாய்
வாங்க நினைக்கும் உயிர்களாய்

பட்ட மரத்தில் பழம் உண்ண
பாமரராய் இருக்கும் குயிலாய்
நேற்று நட்ட கொடிமரத்தில் உலகம்
நினைக்கும்போது தூக்கு மாட்டும்

எழுதியவர் : . ' .கவி (18-Mar-11, 11:39 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 358

மேலே