முகவரி தொலைத்த முழுமைகள்

செதுக்கும்போது
சிதறித் தெறிக்கும்
சிறு கற்களுக்குள்ளும் ஒளிந்திருக்கக்கூடும்
சிற்பியறியா
கலைநயமிக்க சிற்பங்கள்.....!

எழுதும்போது
தெரிவு செய்யப்படாது
நீக்கப்பட்ட வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்திருக்கக்கூடும்
கவிஞனறியா ஆயிரமாயிரம்
இலக்கிய நயங்கள்....!

படைப்புகளில்
விடுபட்டுப்போன
இக்கற்களும் சொற்களும்
இயல்பில்
பண்புயர் தியாகிகளே....!

எழுதியவர் : abusaaema (11-Sep-14, 11:34 am)
பார்வை : 103

மேலே