தம்பி பொறந்தாச்சு
பிறக்கும் பொழுதே இரண்டு தாயுடன் பிறந்த அதிர்ஷ்டசாலி நான்.
ஆம் அக்காளுடன் பிறக்கும் அணைத்து பிள்ளைகளும் இரண்டு தாயுக்கு பிள்ளை ஆகிறார்கள்.
( ஒரு அக்காளின் கவிதையினை தம்பி வந்து எழுதிருக்கேன்)
தாய் வயிறு வீங்கி போயி
அது ஆச்சு பல மாசம்
அவ கன்னத்தில் முத்தம் வைக்க
மறந்தாச்சி பல மாசம்
அவ வயிற்றோடு காது வச்சு
உதைத்தானா பேசறானா அப்ப அப்ப
கேட்டுப்புட்டு,
ஓயாம முத்தம் வைப்பேன்
அவள் வயித்து வழி தம்பி கன்னத்துல.
இரவோடு இரவாக இடுப்பு வலி
கண்ட தாய, ஆஸ்பத்திரி தூக்கி போக
பக்கத்து விட்டு அத்த கையில்
என்னை பாக்க சொல்லி போக
தூக்க கலக்கத்துல அப்படியே தூங்கிப்புட்டேன்.
கண் முழிச்சு பார்கையில கை அவளை
தேடயில
ஏமாற்றம் மிஞ்சி நிற்க எம்மானு கத்தி நின்னேன்
காத்து வழி சேதி ஒன்னு காதோரம்
தடவி நிக்க.
பெற்றாலாம் என் அன்னை அழகான
தம்பி ஒன்னை.
மூச்சி முட்ட அழுது விட்டேன்
சோறு தண்ணி தட்டி விட்டேன்
இப்பவே தம்பி பாப்பா பார்கனும்னு
தலைகீழா நின்னு பார்த்தேன்
தரையிலும் புரண்டு விட்டேன்
பக்கத்து வீட்டு அத்த சொன்னா அடியே ராசாத்தி காலையில
போகலாமடி அழாம சோறு தின்னு.
விளையாட போறேன்னு பொய் சொல்லி வாசல் வந்தேன்.
நாலு மயில் தூரமுள்ள ஆஸ்பத்திரி
எங்கிருக்கும் எனக்குள்ளே கேட்டுப்புட்டு எத்திசையோ ஓடி நின்னேன்.
ஒன்னும் விளங்கலயே சுடுகாடு போலிருக்கே
வந்த வழி திரும்பிபார்த்தும் வழி
ஏதும் தெரியலயே
பூச்சான்டி கதையெல்லாம் மறக்காம
நெனைப்பு வர
காலில்லா பேய் ரெண்டு பின்னாலே
வாருதய்யா
தப்பிக்க நெனச்சி நான்
பச்சை குலத்தின் மதில் கிழே மறய்ந்து நின்னேன்
தம்பி முகம் காணலயே
தாய் மடியும் கிடைக்கலயே
விம்மி விம்மி அழுகையிலே
ரெண்டு கண்ணும் வீங்கிடுச்சு
செவந்துபோயி உறங்கிடுச்சு.
பாட்டியும் அப்பனும் ஊரெல்லாம்
எனை தேடி
கிடைக்காமல் போனேனே.
ஆண் சிங்கம் பொறந்தாச்சு
உன் பொண்ண காணலயே
ஆண்டவன் பறிச்சானோ
அரளிக்கா குடிச்சாலோ
தொலஞ்சவ கெடைக்கலனா
போதுமடி ஆண் புள்ள
அழுகாத என் மவளே
அழுதே சொன்னாளாம் என் பாட்டி.
சுருக்குன்னு கோபப்பட்டு விடுக்குன்னு
எழுந்தாளாம் என் தாயி.
ஆண் உசுரு இங்கிருக்கு
என் மவ உசுரு எங்கிருக்கோ
பெத்தவளுக்கு பேதமுன்டோ
ஆண் உசுரு பெண் உசுரு
பாதி உயிரோடு பத்து நொடி
தாங்காது என் உசுரு......
இப்படி விம்மி அழுதுகிட்டே
பச்ச உடம்புக்காரி
புறப்பட்டாளாம் என தேட.
எங்கெங்கோ தேடிப்புட்டு
பச்ச குலம் வந்து நின்னா கடசியில,
ராசாத்தி எங்கிருக்க அழுதுகிட்டே
கத்தி நின்னா.
தாய் குரல் கேட்டபின்னே
தாவி போயி கட்டிகிட்டேன்
தம்பி முகம் பார்க்க வந்து
தடம் மாறி போனம்மா
சேத்து வச்ச சொப்பெல்லாம்
காட்ட வந்தேன் தம்பிகிட்ட,தம்பிய காணலயே
உன் வயிறு இப்ப வீங்கலயே.
ஆத்தாமடி சாஞ்சிகிட்டு ஆசுபத்திரி நா போக
புத்தகத்துல பாத்த பொம்ம போர்வையில கேடப்பதுபோல்
பட்டு வழ வழப்பா படுத்திருந்தான் என் தம்பி
பக்கத்துல நா போயி தொட்டு தூக்க ஆச பட்டேன்
செவ செவன்னு அவன் பாதம் நா சுரண்ட
தொட்டாசினுங்கிபோல போர்வைக்குள்ள சுருண்டுகிட்டான்.
கன்னத்துல கன்னம் வச்சு நெத்தியில முத்தம் வச்சேன்.