ஹலோ, துபாயா

MAN : ஹலோ,சன் மியூசிக்கா?
ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.
MAN : ஓ...அப்படியா மேடம்.
ANCHOR : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
MAN : சரி மேடம்.நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.
ANCHOR : தாராளமா சொல்லுங்க சார்.
MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க.அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.
ANCHOR : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு?
MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
காளியம்மன் காலனி
மானாமதுரை
கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.
ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர்
சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?
MAN : இல்ல மேடம்.அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு,வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க.நான் கிளம்புறேன்.
ANCHOR : அடடா...களவாணி பயகூடவா இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தேன்.

எழுதியவர் : படித்ததில் சிரித்தது (10-Jul-15, 9:30 pm)
பார்வை : 209

சிறந்த நகைச்சுவைகள்

மேலே