ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர்

ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர் . . .
சிறிது தூரத்தில் ஒரு பெண் இரத்தக் காயங்களுடன் தங்கள் காரை நோக்கி ஓடி வருகிறாள் . . .
மனைவி காரை நிறுத்தாமல் செல்லுங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடப்போகுது என்று எச்சரித்தாள் . . .
ஆனால் அவள் கணவரோ வண்டியின் வேகத்தை குறைத்து பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.
"வந்த கார் விபத்து ஏற்பட்டு அங்கு என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என் குழந்தையை காப்பாற்றுங்கள்" என்று கதறினாள் . . .
அவரும் இறங்கி சென்று விபத்து நடந்த காரை பார்த்தார்
முன் சீட்டில் ஒரு பெண்ணும் அவள் கணவரும் இறந்து கிடந்தனர். பின் சீட்டை பார்த்தார். அங்கு ஒரு குழந்தை
கிடந்தது.
உடனடியாக அந்த குழந்தையை எடுத்து கொண்டு காரை நோக்கி ஓடினார் , மனைவியிடம் கொடுத்து விட்டு தன்
உதவி கேட்ட பெண் எங்கே என்று தேடினார்.
எங்கும் காணாததால் விபத்துகுள்ளான காரை நோக்கி சென்றார் . . .
இறந்து கிடந்த ஒருவரையும் அவருக்கு அடுத்த சீட்டில் சீட் பெல்ட் மாட்டியபடி இறந்து பெண்ணை பார்த்தார் . . .
அந்த பெண் தன்னிடம் சற்று முன் தன் குழந்தையை காப்பாற்ற உதவிகேட்ட அதே பெண் தான் அவள் . . .
அன்னை என்பவள் தான் இருந்தாலும் சரி இறந்தாலும் சரி குழந்தையின் வாழ்வுக்காகவே வாழ்வதைவிட சிறந்த தெய்வத்தை வேறு எங்கும் காண முடியாது . .

எழுதியவர் : பிதொஸ் கான் (18-Sep-15, 7:12 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 157

மேலே