கீர்த்திக்கு யாரோடு கல்யாணம்

கீர்த்திக்கு யாரோட கல்யாணம்?

"என்னமோ போ!!! நீ சொல்றது எதுவும் நல்லதாய் படலே.... அண்ணா நமக்கு எவ்வளவோ செய்திருக்கா... அவர் விருப்பததை சொல்லிருக்கார் அதை நாம கொஞ்சம் யோசிச்சு பண்ண வேண்டாமோ கீர்த்தி.... " உத்ரா மனசு தாளாமல் தன தங்கையிடம் சொல்லிக்கொண்டே சமையலை கவனித்தாள்... இவர்கள் இருவருக்குமே 10 வயது வித்யாசம்.... அண்ணன் கிருஷ்ணனுக்கு உத்ராவைவிட 8 வயது அதிகம்....

கீர்த்திக்கு 3 வயது இருக்கும் போதே பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர்....

குடும்பமே இடிந்து போனது.... இரண்டு நாள் முன்னர்தான் கிருஷ்ணன் பட்டதாரி ஆனான்... மேல் படிப்பு படிக்க ரொம்ப ஆசைப்பட்டான்... என்ன செய்வது? எல்லாம் தலை கீழ் ஆனது.... கொஞ்சம் பணம் அப்பா வேலை பார்த்த இடத்தில வந்தது.. மற்றபடி பெரியதாய் ஒன்றும் இல்லை... குடும்ப பாரம் அனைத்தும் அவன் தலையில் ஏறியது..... சந்தோஷமாய் ஏற்றான்....

ஒரு அப்பாவின் பாசத்தோடு தங்கைகளை வளர்த்தான்.... சிறு சிறு வேலைகளுக்கு சென்றான்.... பேப்பர் போட்டான்.... ஹோடேலில் வேலை பார்த்தான்..... யாரோ தெரிந்தவர் மூலம் ஒரு சிறு அலுவலகத்தில் குமாஸ்தாவாக நுழைந்தான் .... இரவும், பகலும் வேலை செய்தான்.... அவர்களுக்கு துணை என அவர்கள் மாமா இருந்தார்... பணத்தால் இல்லை என்றாலும் அவ்வப்போது இவர்களை வந்து பார்த்து , ஆறுதலாய் இருந்தார்....

இதோ 25 வருடங்கள் ஓடியே விட்டன....

கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகி 3 பெண்கள் .... உத்ரா திருமணம் ஆகி அவளுக்கு ஒரே மகன்...

கீர்த்திக்கு 28 வயதாகிறது.... அவள் நன்றாக படித்து வேலைக்கு செல்கிறாள்... கொஞ்சம் நாள் தள்ளிதான் கல்யாணம் என்று முன்னமே சொல்லிவிட்டாள்...
ஆனால் ஒரு வாரம் முன் ஒரு குண்டை தூக்கிப் போட்டாள்... தன்னுடைய தோழியின் அண்ணனை விரும்புவதாக..... ஒன்றும் பெரிய பழக்கம் எல்லாம் இல்லை... வெறுமனே பேசி இருக்கிறார்கள் .... அதுவும் இவள் விருப்பத்தை அவனிடம் சொன்னதில்லை....

இது யாருக்கும் பிடிக்கவில்லை.... கிருஷ்ணனுக்கு இதில் கொஞ்சம் கூட ஈடு பாடில்லை.... " அண்ணா... சுந்தர் நல்லவர்... ஆனால் ஒரு நிரந்தர வேலை இல்லை... நான் நல்ல வேலையில் இருக்கிறேன்.. அதனால் நான் சமாளித்துக்கொள்வேன்.." என்றாள் கீர்த்தி ஏதோ முடிவெடுத்தவளாக.... கிருஷ்ணனுக்கு இதை கேட்டதும் சற்று மனம் வருந்தியது.... தொடர்ந்தார
...." கீர்த்தி.... நேற்றுதான் நானும் உன் மன்னியும் அவள் அண்ணா மகனை உனக்கு நிச்சயம் செய்வதாய் முடிவெடுத்தோம்.... நல்ல குடும்பம்.. பழகிய இடம்.... உன் சம்மதம் தான் வேண்டும்.. அவர்கள் சரி என்று கூறி விட்டனர்... இன்று, உத்ராவிடம் பேசிவிட்டு உன்னிடம் கேட்கலாம் என்று இருந்தேன் . அதற்குள் !!!! ஏமாற்றத்தோடு பேசினார்...

"ஏன் என்னிடம் முன்னாடியே கூறலே? எனக்கு விருப்பம் வேண்டாமா அண்ணா?" மெல்லிய குரலில் கேட்டாள்

"உன்னிடம் சொல்லத்தான் முடிவெடுத்தோம்... அதான் நீ வேறு மாதிரி சொல்றியே?"

" எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்..." கீர்த்தி முடிவாய் சொன்னாள்...

"நிதானமாய் யோசி.... " அண்ணன் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்

இதைப்பற்றிதான் உத்ரா கீர்த்தியிடம் பேசினாள்...

ஒரு வாரம் நகர்ந்தது.... கீர்த்தி யாரிடமும் பேசவில்லை.... மறுநாள் , உத்ராவை பார்க்க சென்றாள்...

" அக்கா! நம்ம அப்பா, அம்மா இருந்தா என்னை சுந்தருக்கு கல்யாணம் செய்து தந்திருப்பா இல்லை" என்று கேட்டாள்..

" நிச்சயமா மாட்டா! உனக்கு நல்லது எது என்று அவாளுக்கு தெரியும் கீர்த்தி.... அண்ணா உன்னை கட்டாயப் படுத்தலே தன விருப்பத்தைதான் தெரிவித்தா... நீ அண்ணா சொல்றவரை கல்யாணம் பண்ணிண்டா கட்டாயம் நல்லா இருப்பாய் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை... சுந்தரை எவ்வளவு நாளாக தெரியும்? உன் விருப்பத்தையே அவரிடம் இன்னும் நீ சொல்லலே... " உத்ரா தன மனதில் பட்டதை தெளிவு படுத்தினாள்...

அன்று இரவு முழுவதும் நன்றாய் யோசித்தாள்... மனதில் தன குழந்தைப் பருவம் ஞாபகத்திற்கு வந்தது... அன்று என் அண்ணா "இவள் எப்படி போனால் எனக்கென்ன" என்று இருந்திருந்தால்? நம் நிலைமை?? பாவம் ! ஒரு தந்தை போல் என்னை ஆளாக்கினார்... அவர் என்றும் என் நலனைத்தான் யோசிப்பார்....! முடிவு செய்தாள்... என்னைவிட என் எதிர் காலத்தை முடிவெடுக்கும் உரிமை அண்ணா கையில் தான் இருக்கிறது என்று...

காலையிலிருந்து கிருஷ்ணன் வீட்டில் ஒரே பேச்சு சப்தம் தான்.. போனிலும் நேரிலும்... இதோ... நிச்சயதார்த்த தேதி குறித்தாயிற்று.....

வெட்கத்தில் கீர்த்தியின் முகம் சிவந்ததை உத்ரா கவனித்தாள்...

மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (7-Feb-16, 4:13 pm)
பார்வை : 282

மேலே