மகளிர் தினத்துக்காக

...........................................................................................................................................................................................
வானம் அளந்தது
வாமனன் மட்டுமல்ல
கல்பனா சாவ்லாவும்..
..........................................................................................................
முதியோர் இல்லத்தில்
பேரனிடம் வேண்டினாள் பாட்டி:
“ அப்பா அம்மாவை நல்லா கவனிச்சுக்கோ..”
.................................................................................................................
கணவர் வராமல் சாப்பிட மாட்டார்
இக்காலத்திலும் மனைவி..
“ அட, அவர் வந்துதானே சமைக்கணும்.. ”
....................................................................................................................
மறு ஒளிபரப்பாகிறது
மனைவியின் குழந்தைப் பருவம்..
மடியில் மகள்..!
...................................................................................................................
பாராட்ட ஆளில்லாதபோது
தலை கோதிச் செல்கிறது..
தாயின் சேலை கொடுத்த காற்று..
.................................................................................................................
கணவரில்லாத இரவில்
தன் வயதொத்த கணவரின் சகோதரர்களுக்கு
தாயாகி விடுவாள் இந்தியப் பெண்..!
..................................................................................................................