பழமொழி - 1

நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.


· கழைக்கூத்து ஆடிய பின் காசுக்கு கீழே தான் இறங்க வேண்டும்.


· குப்பையிலே கிடந்தாலும் குந்துமணி மங்காது.


· கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது.


· உலோபி (கஞ்சன்) என்றுமே ஏழை.


· விளையும் போதே சோறாய் இருந்தால் விறகும், வரட்டியும் தேவை இல்லை.


· தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.


· பொக்கை வாயன் மெச்சினானாம் பொரி மாவை.


· கூப்பாட்டால் சாப்பாடாகுமா?


· இடம் வலம் தெரியாதவனுடன் இணக்கம் பண்ணக்கூடாது.


· திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியும்.


· ஆசிர்வாதமும், சாபமும் அறவோர்க்கு இல்லை.



தொகுப்பு: என்.கணேசன்

எழுதியவர் : என்.கணேசன் பிளாக்ஸ்பாட் (8-Mar-16, 8:28 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 128

மேலே