ஊருக்கு நல்லதனை ஓது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)
ஆயிரம்பேர் வந்திங்கே ஆயிரந்தான் சொல்லிடுவர்
நோயின்றி வாழ்வதற்கும் நொய்யதுயர் - போயிடவும்
நேருக்கு நேர்நின்று நீங்கியதே என்றுசொல்லி
ஊருக்கு நல்லதனை ஓது!
- வ.க.கன்னியப்பன்

