தென்றல்---ப்ரியா

என் உயிரோடு ஒன்றியவள்
என்றும் என்னை விட்டு பிரியாதவள்
என்னை வியர்வை சிந்த விடாதவள்
என் மூச்சாய் நிற்பவள்
கோபத்தால் என் கண்ணை கலங்க வைத்தவள்
மிதமாய் வந்து என்னை குளிர்ச்சியூட்டியவள்
என் பேச்சை கேளாதவள்
யாரும் அவளை பிடிக்க முடியாது அப்படி ஒரு புத்திசாலி
யாருக்கும் அடங்காதவள்
இந்த உலகமே என்கையில் என சுற்றுபவள்
நம் தேகம் தொட்டும் அவள் முகம் காட்ட மறுப்பவள்
இவள் மூச்சுநின்றால் என்மூச்சும் நின்றுவிடும்
உன்னை ஒருமுறை தொட்டு பார்த்து
கட்டியணைத்து முத்தமிட ஆசை
எப்போது நடக்கும் என் தென்றல் காற்றே....?

எழுதியவர் : ப்ரியா (23-Mar-16, 1:24 pm)
பார்வை : 235

மேலே