இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே – மோகனம்

கு.மா. பாலசுப்பிரமணியம் இயற்றி, ஜி. ராமநாதன் இசையமைப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினிக்காக P.சுசீலா. P.B.ஸ்ரீனிவாஸ் மோகன ராகத்தில் பாடிய ஒரு அருமையான பாடல் ’இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’. யு ட்யூபில் கேட்டு ரசிக்கலாம்.

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே (இன்பம் பொங்கும்)

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி.. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே (இன்பம் பொங்கும்)

கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம்தான் ஆனதிலே அ..அ..ஆ.. (கண்கள் நாடும்)

கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே (இன்பம் பொங்கும்)

துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்பதீபம் உன் ரூபம் தான் மாமயிலே அ..அ..ஆ.. (துள்ளி ஆடும்)

வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

அன்பில் ஊறும் மெய்க்காதல் போலே பாரிலே
இன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரே

கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே (இன்பம் பொங்கும்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Apr-16, 3:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 894

மேலே