ஊமைக் கண்ணீர்

வாரி அள்ளி போட்டு விட்டார்
புதை குழியில்
வாழும் வரை தீராது
துயர் விழியில்
பார்த்த விழி நோகிறது
பரிதவிப்பில்
கேட்ட செவி கொதிக்கிறது
பெரு நெருப்பில்
வஞ்சகம் தீர்க்கும் வகையறிந்து
வலிமை கொண்டார்
சூசகமாய் வலு சாகசமாய்
வெற்றி கொண்டார்
பிஞ்சோடு பல பூக்களையும்
பறித்தெறிந்தார்
பீரங்கியின் பின்னிருந்து
பெருமை கொண்டார்
ஒட்டு மொத்த உயிர்களையும்
காவு கொண்டார்
ஓட்டாண்டியாய் எமை மாற்றி
ஏப்பம் விட்டார்
வதைத்தெடுத்து வாரி அள்ளி
குழி புதைத்தார்
வகை வகையாய் பொய்கள் பேசி
வேசம் கொண்டார்
சேரும் திசை தொலைத்தவராய்
நாமும் நின்றோம்
சேர்த்தழித்து புதைத்துவிட்டார்
புதையலெனப் புதைகுழியில்
வாழும் வரை தீராது
துயர் விழியில் - நீதி
வெல்லும் வரை
வழியாது நீர் விழியில்
புதைத்தாலும் அழித்தாலும்
எரித்தாலும் இடித்தாலும்
எலும்போடு சதை மோதி
தமிழ் என்றே நா கூறும்
மறைத்தாலும் மாற்றி அமைத்தாலும்
முறைத்தாலும் முட்களால்
மூடி மூடி அடைத்தாலும்
விண்ணை முட்டி விருட்சமாகும்
மரித்தாலும் மறைத்தாலும்
மறத் தழிழர் மீண்டெழுவர்
மரணத்தை வென்றெழுவர்
எரிக்கப்பட்ட கிரோசிமா நாகசாயியும்
புதைக்கப்பட்ட முள்ளிமண்ணும்
வரலாற்றின் வடுக்களே அன்றி
வீரத்தின் வெற்றி அல்ல