நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பழக்கம்கள், கடமைகள்

பெண்கள்....
1.சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.

2. துளசி மாடத்திலிருந்துபூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது.துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

3.சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு துவங்க தாளில் எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

4. மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரபு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக பொலிவு வசீகரமுண்டாகும்.....

5.வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்..

மேலும் தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும்,மேல் நோக்கி எரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.

6.இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.

7.வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் வாயால் ஊதி அனைத்திலும் கூடாது ..

8.பெண்கள் பூமியை அதிர்ந்து உதைக்கவோ நடக்கவோ கூடாது ,குறிப்பாக குதிக்கால் மிக முக்கிய யோகலட்சுமி வாழும் இடமாகும், இதனால் பூமியை யார் உதைத்தாலும் நிச்சயம் உடனே தரித்திரம் பிடிக்கும்..

9.பெரிய காரியம்களுக்கு பெண்கள் தீட்டுடன் செல்ல நேர்ந்தால் சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல்/தோஷம் இல்லாமல் முடிவடையும்.

நமது

1.இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்
2. கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஓரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.
விளக்கம் ...

சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்...

சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும்பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்

3.குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது..

4.அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.

5.சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.
6.மருதாணி இலைகள் லக்ஷ்மி தேவி ஆகையால் கைகளால் உருவி பறிக்க வேண்டும் ஒடிக்க கூடாது.

7.அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.

8.ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.

9.நாம் செய்த நல்ல காரியத்தை (புண்ணியம் தருவது ) பிறரிடம் சொல்லக்கூடாது ,பாபத்தை எல்லோரிடமும் சொல்லவேண்டும் ..

10.தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும்.
இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால் திருமணத் தடை அகலும்.
உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.
கால்நடைகளுக்கு தீவனம்(உணவு ) அளித்தால் வாழ்வு வளம் பெறும்...

நன்றி
கும்ப சித்தர்
காக்கை சித்தர் ஆசிகளுடன் ....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (17-Jul-16, 11:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 158

சிறந்த கட்டுரைகள்

மேலே