கண்ணகி வாழ்க்கை

கேவலப் பட்டதொரு
கோவல வாழ்க்கை
வாழ்ந்து வந்த என்னை
தாவர நிழலொத்த
தணிந்த அன்பினால் ஆலிங்கனித்தவளே...!

கண் காணா தேசத்தில்
யுவதி எவளோடோ
அற்பச்சுகம் காண
பொருளெல்லாம் இழந்து
வெறும் பயலாய்
வீடு வந்த என்னோடு
ஊடல் செய்யாது
நேச மழை பொழிந்தவளே...!

கெட்ட வழி போன என்னை
தட்டி கேளாது-உன்
தாலிக்கு பங்கம் வந்த போதும்
தாங்கி நின்று
பேராசைக் கொள்ளனால்
கள்ளன் என்றெனக்கு பெயர் வர
உயிர் துடித்தவளே! உத்தமியே!

பத்தினியாய் இருந்தும் உன் வாழ்க்கை
பயனற்று போனதடி..!

தாழ்போட்டு வைத்திருந்தால்
தாசித் துணை தேடியிருப்பேனோ???

தங்கமே
யாருக்கும் உதவாது உன் வாழ்க்கை!

அங்கப் புதைதலுக்கு ஆசைப்பட்டு
என் போல் அலையும்
கணவன்மாரை
கண்டித்தல் தவறில்லை கண்ணே!

கண்ணகி உன் போல் வாழ்தல்
கணவன்மார் உயிருக்கு உலையென்று
ஊருக்கு சொல்லி விடு..!

எழுதியவர் : புதினக்கவி (25-Oct-16, 3:28 pm)
Tanglish : kannagi vaazhkkai
பார்வை : 275

மேலே