சிரிக்க முடிஞ்சா சிரிங்க

உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. அனைத்து. நாடுகளின் பூனைகளையும் வீழ்த்தி, சீன பூனை முன்னனியில் இருந்தது....

இங்கிலாந்து பூனை, பிரான்ஸ் பூனை, ஜெர்மனி பூனை, ஆஸ்திரேலிய பூனை, அமெரிக்க பூனை என இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் சீன பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன....

சீன பூனை, பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழு, கொழுவென இருந்தது.....

கடைசி சுற்று....
இந்தச் சுற்றில் சீன பூனையிடம் இந்திய நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்.
பார்வையாளர்களுக்கு ஒரே வியப்பு!

இந்திய நாட்டின் பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பில்லாமல், தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது.
இதுவா சீன பூனையிடம் மோதப்போகிறது? பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்.

போட்டித்துவங்கியது.....

சீன பூனை அலட்சியமாக இந்திய பூனையின் அருகில் நெருங்கியது. இந்திய பூனை முன்னங்காலை
சிரமப்பட்டு தூக்கி ஒரேஅடி...... சீன பூனை கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது. பார்வையாளர்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றார்கள்.

சற்று நேரம் சென்றபின்,
மெதுவாக கண்விழித்து பார்த்த சீன பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை... இந்திய பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது. போட்டியில் வென்றதற்காக இந்திய பூனையை எல்லோரும் கைகுலுக்கிப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.....

சீன பூனை மெதுவாக எழுந்து, இந்திய பூனையின்அருகில் சென்று, இவ்வளவு பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி என்று கேட்டது.....

சீன பூனையின் காதில் மெதுவாக இந்திய பூனை சொன்னது: "நான் பூனையே இல்லை, நான் ஒரு புலி. பஞ்சத்தாலும், லஞ்சத்தாலும் இப்படியாகிவிட்டேன்".....

_கொழுத்தாலும் பூனை பூனைதான்!_
_பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!!_

எழுதியவர் : செல்வமணி (3-Nov-16, 10:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 636

மேலே