மனசாட்சி
மனசாட்சி
எந்த வழக்கிலும்
சாட்சியாவதற்காக
தேடவில்லை
எந்த தவறையும் நிருபிக்கவோ
மறுக்கவோ தேடவில்லை
எவர் மீதும் குற்றம் சுமத்தவும் தேடவில்லை
மெல்லிய நூலிழை
வேலியாக இருந்தாலும்
கடக்கமுடியாதிருந்ததை
காலம்
தொலைத்துவிட்டதற்காகத்தான்
தேடுகிறேன்
மனசாட்சியை.
நிலாரவி.