காதல் கடிதம்

சந்தியாகால நந்தவனப் பைங்கிளியே!
கொஞ்சும் உன் பைந்தமிழ் மொழியை கேட்டு
என் மொழியை நான் மறந்தே போனேனடி!

பூரண நிலவின் அழகை கொண்டவளே!
உன் பரிபூரண அன்பில்
நான் என்னை தொலைத்தேனடி!

உன் மோகன புன்னகையில்
வசியப்பட்டு
உன் வசமானேனடி!

ஜொலிக்கும் தங்கத்தின் சாயத்தையும்,
மேலோக ரம்பையின் சாயலையும் கொண்டவளே!
உன் தோளில் சாய்ந்து பூலோக பவனிவர
எத்தனிக்கும் உன் காதலன்.

எழுதியவர் : உமா (26-Apr-17, 10:54 am)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : kaadhal kaditham
பார்வை : 101

மேலே