காதல் பல வண்ணம்
காதல் பல வண்ணம்
குமார் என்பவன் தனது குழந்தை பருவத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகான குக்கிராமத்தில் வாழ்ந்தான் கிராமத்யே சுற்றிவருவன் அவனது ஆரம்ப கல்வியை பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தொடங்கினான் அங்கு முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்தான் காலம் நகர்த்துகொன்டே இருந்தது அவனுக்கோ சுட்டித்தனமான மழலை வயது சற்று படிப்பு தூரமாகவே இருந்தது ஆனாலும் குறும்புத்தனம் அதிகம் இருந்தது அவன் படிக்கும் வகுப்பில் இருபாலர் கல்விமுறை அந்த மழலை பருவத்தில் மொட்டாக மலர்ந்தது மழலை காதல் மனம் வீசியது.
மண்மணம் மாற மழலை காதல் மறக்கமுடியாத நினைவுகளை சுமந்து ஆரம்பப்படிப்பில் இருந்து உயர் நிலை படிப்புக்காக வேறுபள்ளிக்கு செல்கிறது அந்த பள்ளியும் அரசால் நடத்தப்பட்டு உயர்நிலை பள்ளியே இங்கு படிப்பு ஆறில் இருந்து பத்து வரை பயனிக்கிறது இந்த அரும்பான அரும்புவயதில் அனைத்தும் இனிதான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றி மறைந்தன சுட்டித்தனமான நட்புவட்டாரம் இங்கும் இருபாலர் கல்விமுறைதான் மொட்டாக இருந்த என் காதல் அரும்பகமாறியது கொஞ்சம் கூடுதலாகவே சுற்றித்திரிந்தான் ஒரு வெகுளித்தனமான சிந்தனைகளோடு வெளுத்ததெல்லாம் பால் என்று எதையும் சாதிக்க துடித்தான் ஆனால் படிப்பில் நாட்டம் குறைவாகவேய் இருந்தது பல வண்ண கவர்ச்சி ஆடை உடுத்த ஆசைப்பட்டான்.
பல தவறுகள் செய்து ஆசிரியரிடம் தண்டனையும் வாங்கினான் நட்புகளோடு மல்லுக்கட்டி சண்டை போட்டு ரத்தம் கூட சிந்தின ஆனால் அனைத்தும் கணப்பொழுதில் மறைந்து மலர் போல் மணக்க ஆரம்பித்துவிடும் காமம் இல்லாத ஒருவித ஈர்ப்போடு தொடர்ந்த காதல் விடைகொடுக்க அவனும் தன் பத்தாம் வகுப்பை முடித்து மேல்நிலை படிப்பு படிக்க அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்றான் படிப்பில் அக்கறை கட்டினான் படிப்படியா முன்னுக்கு சென்றான் இங்கும் இருபாலர் வகுப்புதான் இங்கும் அரும்பாக இருந்த அவன் காதல் மலராக மலர்ந்து பூத்து குலுங்கி மனம் வீசியது மனம் படபடக்க காம உணர்வுகளுக்கு கால் கைகள் முளைக்க தொடங்கியது காணும் அனைத்தும் அவன் கண்களை மறைத்தன செய்வதறியாது திகைத்தான் மேல்நிலை படிப்பும் முடிவுக்கு வந்தது.
மேலும் படிப்பை தொடர கல்லூரிக்கு சென்றான் படிப்பை செம்மையாக படித்தான் ஆனால் இங்கும் இருபாலர் வகுப்புதான் மலராக இருந்த என் காதல் முதிர்ச்சி அடைந்து மோக முள்ளாய் அவனை துன்புறுத்தியது ஆனால் துன்பங்கள் துவண்டு ஓடின ஆனால் ஒருவித இனம் புரியாமல் புலம்பவைத்தன பலவகையில் அவன் பெற்றோரின் பணத்தை சோப்பாக கரைத்தான் காதலுக்காகசுற்றி திரிந்தான் காலம் கடந்து காத்துக்கிடந்தான் கதவுதிறக்கும் என்று ஆனால் கதவு திறக்கவில்லை வேறுஒருவனுக்கு திறந்தது தித்திக்கும் சுவையோடு குடும்பம் நடத்தினால் அவன் குறிக்கிடவிரும்பாமல் மறக்க ஆரம்பித்து மனதைமாற்றிக்கொண்டான்.
புதுமலரை மணக்க ஆசைப்பட்டான்என் பெற்றோர் பாத்து முடித்த பெண்ணை மணந்தான் மனம் முவந்த வாழ்க்கையை நடத்திவருகிறான் உங்களுக்கு இந்தக்கதையின் மூலம் சொல்லப்படுவது என்னவென்றால் காதல் என்பது வானவில் மாதிரி பல வண்ணங்களை கொண்டது நம்முடைய ஒவ்வொரு பருவத்திலும் தோன்றி மறையும் நிலை இல்லாத ஒரு செயல் அனைத்தும் நமக்கு வாழ்கை கொடுத்த ஒரு படமாக எடுத்து கொண்டு அனைத்தையும் கடந்து செல்லவேண்டும் அப்படி இருந்தால் தான் இந்த நவீன உலகில் வெற்றி காணமுடியும். நம் வாழ்வில் வந்து போகும் அணைத்து நல்லதுக்கே என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.நம் வாழ்க்கையில் காதல் முதல் அனைத்தும் பல வண்ணம் கொண்டவை நாம் வண்ணங்களை போல வாழ்க்கையை சமாளித்து வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.