வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும்,
வேண்டியது வேண்டும்,
வேண்டியே பலன் கைமேல்
பெற வேண்டும்.

காணி நிலம் வேண்டும்;
காணும் இடம் எல்லாம் பசுமை நிரம்ப வேண்டும்;
கண்ணியம் காக்க வேண்டும்;
திண்ணிய எண்ணம் வேண்டும்;
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
தீயாத நெஞ்சம் வேண்டும்;
தீண்டாத நாக்கு வேண்டும்;
வேண்டாத செயல் செய்யாமல் இருக்கவேண்டும்;
வேற்றுமையின்றி ஒற்றுமையாய் வாழ வேண்டும்.

நோயற்ற உடம்பு வேண்டும்;
நோகாத மனம் வேண்டும்;
தெரியாத அசிங்கம் வேண்டும்;
தெளிவான மனம் வேண்டும்;
தெருவெங்கும் குப்பைகள் நிரம்பாமல் இருக்க வேண்டும்;
தெரிதளில் புரிதல் வேண்டும்;
செயலில் ஊக்கம் ஆக்கம் வேண்டும்;
எண்ணங்கள் யாவும் வண்ணங்களாக இருக்க வேண்டும்;
எண்ணியதை முடிக்கத் திடம் வேண்டும்;
எட்டாததற்கு ஆசைப்படாமல் இருக்கவேண்டும்;
தேடித் தேடி கற்க வேண்டும்;
ஓடி ஓடி உழைக்க வேண்டும்;
ஓயாமல் புறம் பேசுவதை நிறுத்த வேண்டும்;
வேதம் பல கற்க வேண்டும்;
வேதனை யற்று வாழவேண்டும்;

இல்லாமை ஒழிய வேண்டும்;
இயலாமை நீங்க வேண்டும்;
இல்லத்தையும் உள்ளத்தையும் அன்பும் அமைதியும் த(தா)ங்க வேண்டும்.

பண்ணிய பாவம் தொலைய நண்ணிய செயல்கள்
பல செய்ய வேண்டும்;
மனிதனிடம் மனிதம் பிறக்க வேண்டும்;
உலகெங்கும் அமைதிப் போர் தொடுக்க வேண்டும்;
ஊரார் வாழ்த்த உத்தமராய் இருக்க வேண்டும்;
உறவாடிக் கெடுக்காமல் இருக்க வேண்டும்;
பேருக்கு வாழாது பெருமை சேர்க்க வேண்டும்;
குறையற்ற மனிதனே யாயினும் கறையற்ற மனிதனாக இருக்க வேண்டும்;
பணிவில் கனிவு வேண்டும்;
பணியில் கவனம் வேண்டும்;
பயத்தில் துணிவு வேண்டும்;
பண்பாட்டில் தெளிவு வேண்டும்;
பகையில்லா உறவு வேண்டும்;
பசியாத்த உணவு வேண்டும்;
பட்டி தொட்டியெல்லாம் கல்வி சென்றடைய வேண்டும்;
பசப்பு இல்லாத பாசம் வேண்டும்;
கசப்பு இல்லாத அனுபவம் வேண்டும்;
கடன் காரன் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும்;
கடமை செய்ய திடம் வேண்டும்;
விவசாய நிலம் வியாபாரம் ஆகாமல் இருக்க வேண்டும்;
வியாதியை விலைபேசாது இருக்க வேண்டும்;
விதியென்று சதிசெய்யாது இருக்க வேண்டும்;
வீதியெங்கும் பசுமை படரவேண்டும்;
தன்னுயிராய் எவ்வுயிரையும் நினைக்க வேண்டும்;
தனிமனித உரிமை காக்கப் பட வேண்டும் ;
தன்னலம் சுயநலம் இல்லா பொதுநலம் வேண்டும்.

நிம்மதி பிறக்க வேண்டும்;
நிதானம் கெடாமல் இருக்க வேண்டும்;
நீதிக்கு தலை வணங்க வேண்டும்;
இன்னல்களையும் இன்பத்தோடு ஏற்க வேண்டும்;
இன்னாது செய்பவருக்கும் இனியவை செய்யவேண்டும்.

எதற்கும் அஞ்சாது செயல்பட வேண்டும்;
குதற்கம் பேசாது இருக்க வேண்டும்;
குறை குற்றம் காணாது இருக்க வேண்டும்;
கூடிவாழப் பழக வேண்டும்;
குடும்ப அறத்தை காக்க வேண்டும்;
கசியும் கண்ணீரில் கருணை காணவேண்டும்;
பற்றில் பயபக்தி வேண்டும் ;
நட்பு பற்றியே தொற்ற வேண்டும்;
பாரோர் போற்ற வேண்டும்;
பாமரனனுக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும்;
படைப்பாளி பயனாளியாக வேண்டும்;
பகையில்லா உறவு வேண்டும்;
புகையில்லா வாகனம் வேண்டும்;
புதையாத பூமி வேண்டும்;
புன்னகை தங்க வேண்டும்.



புன்னகையே உன் நகையாக வேண்டும்
புன்னகை பிறரை புண்ணாக்காமல் இருக்க வேண்டும்;
அன்பில் குனிவு வேண்டும்;
அன்பால் குழைய வேண்டும்.

வாக்கில் முதிர்ச்சி வேண்டும்;
வழக்காடாது இருக்க வேண்டும்;
வாய்மையில் தூய்மை வேண்டும் ;
வாழ உனக்கு வைராக்கியம் வேண்டும் ;
கவலையை மறக்க சிரிப்பு வேண்டும்;
கண்ணியம் காக்க வேண்டும்;
வறுமையிலா வாழ்க்கை வேண்டும்;
வளமான மக்கள் செல்வம் வேண்டும்;
வாழ்வாங்கு வாழ வேண்டும்;
வானம் பொய்காது இருக்க வேண்டும்;
வாய்மையில் தூய்மை வேண்டும்;
பொருமை பெரிதும் வேண்டும்;
பொறாமை கருக வேண்டும்;
பொய்யான வாழ்வு ஒழிய வேண்டும்;
வறியார்க்கு ஈதல் வேண்டும் ;
அறியார்க்கு அடக்கம் வேண்டும்.

குன்றாத புகழ் வேண்டும்;
குறையிருந்தாலும் கறையில்லாத குணம் வேண்டும்;


கள்ளம் கபடற்ற வாழ்வு வேண்டும்;
கல கலவென்றே சிரிக்க வேண்டும்;
முயற்சி எடுக்க வேண்டும்;
முறைதவறி வாழாது இருக்க வேண்டும்;
அதர்மம் அழிய தர்மம் காக்க வேண்டும்;
வன்மம் வக்கரம் இல்லாமல் இருக்க வேண்டும்.

அதிகாலை விடியலை பார்க்க பறந்தோட வேண்டும்;
அந்திப்பொழுதை பிடித்து சிந்தி விளையாட வேண்டும்;
கோவில்கள் யாவும் அறச்சாலைகளாக வேண்டும்;
கொள்ளை யடிக்காது
கொள்கையுள்ள மனிதனாய் வாழவேண்டும்;
கோழைக்கு வீரம் பிறக்கவேண்டும்;
மருத்துவமனைகள்யாவும் மனமகிழ் மன்றமாகவேண்டும்;
பாடசாலைகள் எல்லாம் பண்பாடுக் கூடமாகவேண்டும்;
பொய்காத பருவம் வேண்டும்;
மொய்க்காத காதல் வேண்டும்.
வேண்டும் வேண்டும்
வாழ்வில் நிம்மதி வேண்டும்
அன்பன் அ. முத்துவேழபப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (19-Jul-24, 5:46 pm)
பார்வை : 72

மேலே