தமிழ்சடலம்

அயல்மொழி
அறிவுக்கு வேண்டும்,
தாய்மொழி
அறிவாக வேண்டும்!!... இது
ஒரு தமிழனின் தன்மானப்பறை!...
ஆங்கில தெய்வங்களுக்கு,
ஆறடி நாக்கு-அதனால்
தமிழ்
தெய்வங்களுக்கு
அறுந்தது நாக்கு!...
தீண்டாமை என்னும்
அக்னிசிலுவையில்
அறைந்து விட்டார்கள்....
மொழி
தீண்டப்பட்டதால்
நாவை விட்டு
தாண்டப்படவில்லை!!...
தாய்மை மொழியே
உன் வாய் மை
தீர்ந்து விட்டால்
என் சேய்மை
செத்து விடும்
போலும்...
சிதையிலிருந்து
புறப்படும் நீ,
புறவிதூக்கிச்செல்லும்
பிணத்துறவிகளால்
புதைக்கப்படுவதா!!!..
உப்புக்கும் ஆகாத
மெப்பு உடல் வைத்துக்கொண்டு
பத்துக்கும் ஆகாதென,
பைத்தியங்கள்
சொல்வதா!!... மொழிபடும் துன்பம்
மூதாதையருக்கு தெரியும்....
அதன் வலியால்
வரும் துன்பம்
கவிஞனின் வார்த்தைகளுக்குள்
எரியும்!!...
தன் பிள்ளைக்கு தன்மானம் கற்றுக்கொடுத்து
உன்மானம் பறிக்கிறது,
உள்நாட்டு
உடுக்கைகள்!!!...
உன் உயிர்
உறிந்து விழுவதை
உற்று நோக்குகிறதே,
அயல்நாட்டு
புற்றுநோய்கள்....
தாய்மையே!!
உன் உணர்வு
உராய்வுபட்டு விட்டதே...
அதனால்
பேனாவுக்கும் எனக்கும்
பெரும் யுத்தம் நடக்கிறதே...
எனது கைகளில்
ஊனம் ஏற்பட்டு
விரல்கள் யாவும்
ஊமையாகிறதே!...
அயல்நாட்டு
ஆரத்தை பிடிப்பதற்க்குள்
பண்பாடென்ற
பட்டமும் பறிபோய்
விட்டதே...
மொழியாவது
மூச்சுவிடும் என்றால்
அதற்க்கும் வழியில்லை...
வீட்டுக்குள் வென்னீரில்
குளிப்பது,
வெளியில்
சூரியக்குளியலில்
மிதப்பது...
ஆம்.
அறிந்த மொழியை
அரவாணி விதமாய் பேசும் அரவாணிகள்
என்றுதான்
மைத்துளிகள்
இரத்தம் சிந்துகிறதே...
என்னை நான்
கொலைசெய்கிறேன்..
என்பதால் பேனாக்கள்
எழுதவிடவில்லை...
மனிதவடிவில், பத்தியம் முடிந்து
மொழியின் வடிவில்
ஏகாதிபத்தியம்
நடக்கிறது!!
ஆம்...
ஒரு நாட்டின்
வளத்தை,
அதன் அனுமதியின்றி,
சூரையாடுவதே
ஏகாதிபத்தியம்....
என்று தீரும்
என் மனவெறியின்
பாரம்!!..
தமிழ் கருவரையில்
பிறந்தோம்...
தமிழ், சடலம்
ஆயின்....
பேனாவே வீங்கி வெடித்து இறந்து விட்டது...
எழுதுவதை நிறுத்து
என்று....தமிழ்சடலமா?
நானும்
இறந்துவிடுவேன்
போலும்!!!.!.