கவிஞன் வாழ்கிறான்
வான் முதல் மண்வரை
விட்டு விடாமல்
எண்ணங்களைச்
சேகரிப்பவன் !
பால் நிலவைக் கண்டு
எண்ணங்களாலே
மேடை அமைத்து
அதன் வழி அறிந்தவன் !
எண்ணிக் கொண்டிருந்த
நட்சந்திரங்களை
அழகுபடுத்தி சீராட்டி
பாராட்டுபவன்!
மழைத் துளி
மண்ணில் விழுந்த
மழலைக்கு
வானம் வைத்த
வண்ண வண்ண சேலை
வானவில்
என்று சொல்பவன் !
வானம் பாடியை
ஆகாயத்தை அளந்து அளந்து
ரசித்து ருசித்து
மகிழ்ந்து பாடுபவன்!
தன் மொழிக் கீற்றை
அறிவித்து விட்டு
காத்துக் கிடப்பவன்
கவிதை பிரசவத்திற்காக !

