"தமிழுக்கு பெயர் போன மதுரை"kavipriyan

தமிழுக்கு பெயர்
போனது மதுரை
என்பார்கள்.....
திருமலை நாயக்கர்
மண்டபம் செல்லும் போது
தெருவில் ஓடி பிடித்து
விளையாடும் குழந்தைகளை
கண்டேன்....
ஒரு சிறுவன் தொட
வருவதை கண்டு மூன்று
சிறுவர்கள் முத்திசையில்
ஓடினர்...
விளையாட்டில் தனித்தனியே
ஓடக்கூடாது என்ற
விதிமுறை இருந்ததோ என்னவோ
தொடவந்த சிறுவன்
(எ தட் நாட் ருள்
ஆல் ஆர் ரன் டு இகுஅல்)
என்று இடைவிடாது
ஒரு நிமிடம் ஆங்கிலம்
பேசுவதை கண்டு
திகைத்து நின்றேன்
அந்த சிறுவன் பேசிய வார்த்தைகளில்
ஒரு எழுத்து கூட இல்லை தமிழில்
அப்போதே தெரிந்து கொண்டேன்
தமிழுக்கு பெயர் போனது
மதுரையில்......
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (30-Aug-12, 9:26 am)
பார்வை : 226

மேலே