!!!....(((எங்கே போகிறது இடுகாடு)))--ருத்ரா

(முகாரிக்கற்பம்
பிரசவித்து
வெடிக்கிறதே......!!!)
. . . . . . . . .
இரு கையேந்தி
இருளில்
இரவல் தேடும்
ஈனச்சாமியினரே......!!!
ஈயப்பாத்திரத்தில்
ஈமொய்த்த
உருண்டைகள்,
உம் தொண்டையில்
அரவவில்லையா?
.. . . . . . . . .
மரித்துப்போன
மண்கூடுகளில்
மன்னரின் கடவுள்
மாண்டு கிடக்கிறதே!!!
கருமாதி முடிக்காமல்
தெருவில்
தேர்ப்பவனிஇழுத்து
வந்தால்
கடவுளே-உனக்கது
ஈமக்கிரியை யல்லவா!
. . . . . .
மாய்ந்து போன
மலர்களைத்தொடுத்து
மாலை
சூட்டினால்
கடவுளே-உனக்கது
மலர்வளையங்கள்
அல்லவா?
. . . . .
குடமுழுக்கு விழாவில்
கும்பத்தில்
ஏறிமிதித்து
தண்ணீர்ஊற்றினால்
உனக்கது
தெவெசம் அல்லலா?
. . . .
அய்யர்வீட்டு
பிண்டச் சோறு,
காக்கையின்
கழிவாயில்
நாறிக்கிடந்தால்,
கடவுளே
படையளில் வைத்த
பச்சரிசிச்சோறு-
உனக்கது
நரகம் அல்லவா....!!!
. . . . .
ஈமக்காட்டில்
எரிவதே
ஈராறு திரிகளில்
எரியும்.
ஆராதனை
விளக்குகளே,
உன்
ஆறடிக்கொல்லி
அல்லவா?
. . . . .
ஓ கடவுளே....!!!
எங்கு தேடுகிறாய்
எங்கு தேடுகிறாய்
உன்
கோயில்வீடு......?
இல்லை இல்லை
அது
உன் ஈமக்காடு!
. . . .
அந்தோ.... பார்...!!!
இனவெறிக்
கோட்டான்களின்
இரவுக்கேதம்
ஒலிக்கிறதா?
. . . . . .
முகாரிக்கற்பம்
பிரசவித்து
வெடிக்கிறதா....?
முப்பது சுரங்கள்
உருவாகி
ஒப்பாரி வைக்கிறதா?
வீணையின்
விடைத்தநரம்புகள்
வெடித்து
இறக்கிறதா.....!!!
ஞாதியத்த பேய்கள்
நாதி பெற்று
நாட்டிய
மாடுகிறதா....!!!
ஆழியின் மூத்திரம்
குடித்து,
ஆவிகள் ஆலாபனை
பாடுகிறதா.....!!!
யாகக்குழியில்,
சாத்தான்கள் சமைந்து,
சாமமே
சக்தியிழந்து
போகிறதா.......!!!
கூத்தியாள் வந்து
குடிகெடுத்து ஆடுகிறதா.....!!!
உம்
கலைவாணி,
தனங்கள் அறுந்து
தாய்மை யிழந்து
கிடக்கிறதா.....!!!
. . . . . .
அதுவே அதுவே
உன்
கோயில் வீடு!
அதுவே அதுவே
உன்
ஈமக்காடு.....!!!
மனிதக்
காட்டெறிகளோடு
நீயும் போய்
சாமத்தில் ஆடு...!!!
இதுதான்
இதுதான்
என்
இந்திய நாடு.........!!!
. . . . .
(தெய்வங்களைச் சொல்லி
தேசம் அழிப்போர்க்குச் சமர்ப்பணம்)

எழுதியவர் : ருத்ரா (30-Dec-12, 3:30 pm)
பார்வை : 167

மேலே