ஒரு வார்த்தை பேசிவிடு....

உடம்பில் ஓடும் இரத்தம்
உறையும் முன்...
நாசிகள் சுவாசிக்க
மறக்கும் முன்...
துடிக்கும் இதயம் துடிப்பை
நிறுத்தும் முன்....
நாடி நரம்பெல்லாம்
நைந்து போகும் முன்...
மூளையும் மூர்ச்சையாகி
நினைவெல்லாம் நினைவிழந்து
போகும் முன்
நிதமும் வேதனையில்
உருக்குலைந்து போகும் முன் ......
உலக உருண்டை
உடைந்து போகும் முன்...
சூரிய பந்து சுற்றுவதை
நிறுத்தும் முன் ...
ஆகாய நிலவு
வண்ணம் மாறும் முன்....
சுற்றி திரியும் காற்று
சுத்தமாய் தீரும் முன்....
வான் மேகம் மழையை
மூடும் முன்...
அண்ட சராசரங்கள்
அனைத்தும் அழியும் முன்....
ஒரே ஒரு வார்த்தை....
ஒரு வார்த்தை மட்டும் பேசிவிடு...
-PRIYA