சபரிசன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சபரிசன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 18-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 0 |
கட்டுரைகள், கவிதைகள் வாசிக்க பிடிப்பதால் கொஞ்சம் எழுதவும் பிடிக்கும்.
ஓருயிரு மாயும் போது
ஈருடலும் சாயுமின்னு
கண்ணும் கண்ணும் பேசும் போது சொன்னாளே - இன்று
கண்டவர்க்கு கழுத்தை நீட்டி நின்னாளே
பல்லழகு சொல்லழகு
பாங்கான நடையழகு - என்னை
மெட்டு கட்டி பாட்டெழுத சொன்னாளே
மெட்டியிட்டு வேறொருத்தன் பத்தியமாய் நின்னாளே
ஊரறிய உறவறிய
உன்வீடு விளக்கெரியும் - மாலையிட்டு
ஊர்வலமாய் போவமின்னு சொன்னாளே - கோலமிட்டு வேறொருத்தன் வாசலிலே நின்னாளே
பாலோடு பழமிருக்கும்
பள்ளியறை பூ மணக்கும்
காலம் வரும் காத்திருன்னு சொன்னாளே - என்னை
கலங்க விட்டு காத தூரம் போனாளே
தவமாய் தவமிருந்தேன் - என்
தாயோட முகம் மறந்தேன்
தேவதையாய் மனசுக்குள்ளே வந்தாளே - எனக்கு
எங்கள் ஊரில்
பள்ளி இல்லை, கோவில் உண்டு
தண்ணீர் இல்லை, கிணறு உண்டு
பணம் இல்லை, குடிகார அப்பாக்கள் உண்டு
பறவைகள் இல்லை, மரங்கள் உண்டு
உறவுகள் இல்லை, பகை உண்டு
வண்ண பூக்கள் இல்லை, ஜாதி உண்டு
மகிழ்ச்சி இல்லை, பண்டிகை உண்டு
மனிதம் இல்லை, மனிதர்கள் உண்டு