ப.மதியழகன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ப.மதியழகன் |
இடம் | : மன்னார்குடி |
பிறந்த தேதி | : 28-Mar-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 319 |
புள்ளி | : 62 |
கவிதையை நேசிப்பவன் சுவாசிப்பவன் கவிதை மழையில் நனைய வருகை தாருங்கள் pamathiyalagan.blogspot.com
நெற்றிப்பொட்டும்
வகிடெடுத்த உச்சிக் குங்குமமும்
கருங்கூந்தலில் மணக்கும்
மல்லிகைச் சரமும்
அடிமீது அடிவைக்கும்போது
ஊஞ்சலென
அசைந்தாடும் கம்மலும்
அழகுக்கு அழகு சேர்க்கும்
வைரக்கல் மூக்குத்தியும்
மண் அளந்த
மென்பஞ்சுப் பாதங்களும்
சமர் புரியும்
இருகண்விழிகளும்
மலர் முகத்தில்
முத்துப் பல்வரிசையும்
நிலவொளியில் மின்னும்
இரு செவ்விதழ்களும்
என்ன தான் ஜரிகை வைத்த
பட்டுப் புடவை
உடுத்திக் கொண்டாலும்
களையிழந்த முகம்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
வயோதிகத்தை
ஒவ்வொரு நடராஜனையும்
உள்ளிருந்து ஆட்டுவிப்பவள்
அந்த சிவகாமி அல்லவா?
வாய்ப்பு ஒரு முறை தான்
உன்னை பரீட்சித்து பார்க்கலாம்
வற்புறுத்தி பணிய வைக்கலாம்
நிர்பந்தப்படுத்தி ஏற்கச் செய்யலாம்
நீ அதிகாரத்திற்கு பணியாமல்
எதிர்க்கலாம்
உனது சுதந்திரத்தை
விலை கொடுத்து வாங்கலாம்
உனக்கு வழங்கப்பட்ட விருதை
தட்டிப் பறிக்கலாம்
உனக்கு சாதகமாக வழங்கப்பட்ட
தீர்ப்பை ரத்து செய்யலாம்
அக்கம்பக்கத்தினர் உன்னைத்
தெரியாதது போல் நடிக்கலாம்
எங்கிருந்து அம்பு பாய்கிறது
எனத் தெரியாமல் தவிக்கலாம்
எனக்கு இதில் சம்பந்தமில்லை என
நீதிபதியிடம் கெஞ்சலாம்
காவலர்கள் கவனிப்பால்
உடம்பு முழுவதும்
லத்தியின் தடம் பதியலாம்
பரோலில் வந்து
தப்பியோட முயலலாம்
இதற்கு மேலும்
சாத்தியப்பட
என் மகள் பூமியை
புதிதாய்ப் பார்க்கிறாள்
அவள் காணும் பூமியில்
மனிதர்களைத் தவிர
அனைத்தும் பேசுகின்றன
அவள் ஒவ்வொரு காலடி
எடுத்து வைக்கும் போதும்
மோதும் தென்றலை
இதமாய் அனுபவிக்கிறாள்
கண்களை வசீகரிக்கும் எதையும்
அவள் கேட்பதில்லை
அவள் கேட்பதெல்லாம் வானத்து
நட்சத்திரங்களைத்தான்
நிலவைச் சுட்டிக் காட்டி
அவள் ஏதோ
பேச முயற்சித்தாள்
பசிக்கிறது போலிருக்கு என்று
அன்னை எடுத்துவிட்டாள்
அவள் எழுந்து நடக்கத்
தொடங்கிய போது
பொம்மைகளைத் தேடிப்
போனாள்
அவள் இருப்பை
தொந்தரவாகக் கருதிய நாங்கள்
அவளை ப்ளே ஸ்கூலில்
சேர்த்துவிட்டோம்
அன்று நான் பார்த்துவிட்டேன்
பழுதடைந்த செல்ஃபோனில்