AriAnbarasan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : AriAnbarasan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 22-Mar-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 8 |
தமிழ் உணர்வாளன்
அய்யா அப்துல் கலாமுக்கு...
அய்யா அப்துல் கலாமே!
தன் அன்பினால் அகிலத்தையே அடிபணிய வைத்தவரே
தன் தாய் திருநாட்டை தன்னுயிர் போல் கட்டிக் காத்தவரே
தன்நலம் விரும்பா எங்கள் "தமிழ்மகனே"
இத்திருநாட்டின் தலை சிறந்த தலைமகனே
குட்டிக் கதைகள் பல கதைத்து
குழந்தைகளை கவர்ந்தவரே
அந்நிய தேசத்திடமும்
அகிம்சையை மட்டுமே விரும்பிய - எங்கள்
அணு ஆயுதமே !
அண்டத்தையே ஆட்டிப் படைத்த -எங்கள்
அணு குண்டுவே !
உலகமே உற்றுப் பார்த்த - எங்கள்
உலக நாயகனே !
அண்டமே ஆடிப் போனதய்யா - உன்
அணுகுண்ட (...)
தீவிரவாதமும் தீவிரவாதியும்......
திறாணியற்றவன் கையிலெடுப்பதுதான் தீவிரவாதம்
தன் மூளையை முடமாக்கி
மூன்றாம் கட்டவனின் மூளையாகும்
முட்டாள் தான் தீவிரவாதி
நீ ஒரு ஆண் மகனாக இருந்தால்
உன் அன்பினால் ஆட்சி செய்யடா
அடிமையாகிறோம் உன்னிடம்
அதிகாரத்தையும் அணு குண்டுகளையும் காட்டி
அழிக்க நினைக்காதே அப்பாவி மக்கள் எங்களை
எங்கள் மதராசப் பட்டினத்தையே
மரண ஒலமாக்கினாயடா மானங்கெட்டவனே
என் உயிரினும் மேலான தாய் தமிழகத்தையே
தடதடக்க வைத்தாயடா தரங்கெட்டவனே
தமிழகம் என்ன உனக்கு தாரை வார்த்தா கொடுத்துள்ளது
தவிடு பொடியாக்க தவிக்கிறாய்
தன்னலம் கருதா தலைமகன்கள்
வாழ்ந்த பூமியட
தமிழா!
பார் எங்கிலும் நம் தமிழ்ப்
பாசங்கள் பரந்து கிடக்க
பதுங்கு குழியுனுள் பலியானாயட
தமிழா!
பாருக்கு வேண்டுமானால் - நீ
பலியாகி இருக்கலாம்-ஆனால்
பச்சைத் தமிழனின் பார்வையில்
பாதாளத்தில் பயிற்சி எடுக்குறாயடா...
தமிழா!
பாசக்காரனுக்கு நீ பசுவடா - ஆனால்
பகைவனுக்கு பசுத்தோல் போர்த்திய புலியடா
தமிழா!
சீற்றத்தில் நீ சிறுத்தையடா
போராடுவதில் நீ புலம் பெயர்ந்த புலியடா
தமிழா!
என்னைப் பொறுத்த வரை - நீ
போராடவே இல்லையடா - நீ
போராடி இருந்தால்
பொசுங்கி இருப்பானடா பொன்சேகா
தமிழா!
பொறுத்தது போதுமடா - நீ
பொறுத்தது போதுமடா -நீ
பொங்கி எழுந்தால்
அதற்குப்